காடு வெட்டி குருவின் மகள் பரப்புரையில் பரபரப்பு..
Kaduvetti Guru Daughter-காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பரப்புரையில் மர்மநபர் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.;
Kaduvetti Guru Daughter
Kaduvetti Guru Daughter-சோளிங்கர் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மர்மநபர்களால் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் ஏ எம் முனிரத்தினம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை, சோளிங்கர் அடுத்த நெமிலி வட்டம், கரியாகுடல் எனும் இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தந்தைக்கு மருத்துவ உதவி செய்யாததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பேசியதாக கூறப்படுகிறது.
இதை கேட்ட பாமகவை சேர்ந்த மர்ம நபர் திடீரென பிரச்சார வாகனத்தில் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த காவல்துறையினர் பிரச்சாரத்தில் இருந்து காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகையை உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மேலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் திரும்பியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2