சோளிங்கர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

சோளிங்கர் பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-24 02:39 GMT

சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்தது.  இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெம்மை குறைந்து குளிர்ச்சி நிலவினாலும், இடி காரணமாக துணைமின்நிலையத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால், புலிவலம், சோளிங்கரில் சில பகுதிகள், பாண்டிய நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

Tags:    

Similar News