சோளிங்கரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோளிங்கர் அருகே நீர்நிலைபகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

Update: 2022-03-31 12:47 GMT

சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள நெட்டேரி, பெரிய ஏரி பகுதிகளில் 2.6 ஹெக்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அங்கு  ஆக்ரமிப்பு செய்திருந்த பகுதிகளை பொதுப்பணித்துறையினர் அளவிட்டு, தாங்களாக முன் வந்தது ஆக்ரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை அளித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதன் தலைமையில் அதிகாரிகள் நெட்டேரி, பெரிய ஏரி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து செய்திருந்த 2.6 ஹெக்டர் நிலத்தையும் நிலத்தை சுற்றி இருந்த அமைந்திருந்த வேலி மற்றும் வரப்புகளையும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி நீர்பிடிப்பு நிலத்தை பொதுப்பணித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதே பகுதியில் ஐந்து வீடுகளில் மின் இணைப்புகளும், பெரிய ஏரி பகுதியில் மூன்று வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

Tags:    

Similar News