பாணாவரத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

பாணாவரத்தில் முதியவரின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-07-24 16:20 GMT

மாதிரி படம்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரோட்டில் மணி என்பவருக்கு சொந்தமான கடைகள் உள்ளது. பாணாவரம் அடுத்த பழையபாளயம் கிராமத்தைச்சேர்ந்த மணி(65) என்பவர் அங்கேயே தங்கி வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார் .

அவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில், கடையில் பிணம் அழுகி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பாணாவரம் போலீஸுக்கு தகவல் தெரித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் மணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News