பாதிரியார் பொன்னைய்யா மீது சோளிங்கர் பாஜக., வினர் போலீஸில் புகார்

சோளிங்கரில், பாதிரியார் பொன்னைய்யா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி பாஜகவினர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.

Update: 2021-07-24 05:02 GMT

சோளிங்கர் காவல் நிலையத்தில் புகாரளித்த பாஜகவினர்.

கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்துக்களையும், பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இழிவாக பேசிய காட்சி சமூக வளைதலங்களில் பரவி வருகிறது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிரியார் பொன்னையாவின் செயலை கண்டித்து அவர்மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர பாஜகவினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்ட பாஜக செயலாளர் அமுதபாண்டியன் தலைமையில், முன்னாள் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சீனிவாசன் , வக்கீல்பிரிவு சேகர், மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News