போதையில் பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு

சோளிங்கர் அருகே போதையில் பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2021-07-08 15:47 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

சோளிங்கர், அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், .அவரது மகன் சத்யமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இவர் கடந்த 3ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். போதையில் இருந்த சத்யமூர்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் .

உடனே , அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்கு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். .அங்கு சிகிச்சைப் பலனின்றி சத்யமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News