கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சோகம்.

கலவையடுத்த செங்காவனத்தில் நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

Update: 2021-07-15 04:37 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த செங்காவனம்,மூதாக்கோயில் தெருவைச்சேர்ந்த மணி,லதா தம்பதியினரின் மகள் கீர்த்தி (8) மற்றும் அதே தெருவைச்சேர்ந்த ராஜீவ்காந்தி மணிமேகலை தம்பதியினர் மகள் கல்பனா (10). சிறுமிகள் இருவரும் அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு விடுமுறை காரணமாக சிறுமிகள் வீட்டிலேயே இருந்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்திவரும் இருவரது பெற்றோர்களும், நேற்று வழக்கம் போல சிறுமிகளை வீட்டிலேயே இருக்கும்படி கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டனர் .

இந்நிலையில், மாலை வீடுதிரும்பிய பெற்றோர்கள் சிறுமிகள் இல்லாததைக் கண்டு அவர்களைத் தேடினர். அப்போது,  அங்குள்ள கீச்சங்குட்டை கரையில் சிறுமிகளின் உடைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கூச்சலிட்டனர் .

உடனே அங்கு ஊர்மக்களில் சிலர் குட்டையில் இறங்கித்தேடினர். சுமார்  ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுமிகள் கீர்த்தி, கல்பனா இருவரையும் சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அங்குசென்ற கலவை சப்இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீஸார் சிறுமிகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News