அரக்கோணத்தில் மணமான இளம் பெண் மாயம்

அரக்கோணத்தில் மருந்து வாங்கச்சென்று காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்

Update: 2021-06-20 09:35 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கிருஷ்ணாப்பேட்டைச் சேர்ந்தவர் விஷாலி, அவருக்கும் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் கடந்த 2018ல் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார் .பின்னர் கல்லூரிப் படிப்பை முடித்த விஷாலி மேற்கொண்டு முதுநிலை  படிப்பிற்காக அரக்கோணத்திலுள்ள அவரது தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் மருந்து வாங்க மெடிக்கல் ஷாப்பிற்கு செல்வதாக பெற்றொரிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்த ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால். அச்சமடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை .   இதனால் அவரது தந்தை அரக்கோணம் டவுன் போலீஸில் இது குறித்த புகாரினை அளித்தார் அதன் பேரில் வழக்குப்பதிந்த போலீஸார் காணமல் போன ஷாலினியைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News