அரக்கோணம் ஒன்றியத்தில் விறுவிறு வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அரக்கோணம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வேடல் ஊராட்சியில் உள்ள வாக்குசாவடியில் மக்கள் காலை முதலே திரளாக வந்திருந்து வாக்களித்தனர். பாரஞ்சி ஊராட்சியில், பதட்டம் காரணமாக, போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்,