தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி தீபா சத்யன் ஆய்வு

தக்கோலம் காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-08-21 06:46 GMT

கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தீபா சத்யன்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அடுத்த தக்கோலம் காவல் நிலையத்தில் ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தீபா சத்யன் ஆய்வு மேற்கொண்டார் .

பின்னர், பழண்டியம்மன் கோயில் அருகில் போலீஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கொரோனா தொற்று குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள்  பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கினார். பின்பு, அவர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர்,சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ,தக்கோலம் மற்றும் அரக்கோணம் மது விலக்கு, அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி, தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு , போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News