கொரோனா விதிகளை மீறிய அமைச்சரின் தேர்தல் பிரச்சாரம்

அரக்கோணம் அருகே கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

Update: 2021-09-29 12:06 GMT

கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் பிரச்சாரம் செய்யும் அமைச்சர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது.

அதில் மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

அவர், அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிகளை காற்றில் பறக்கவிட்டு அமைச்சரே பிரச்சாரம் செய்துவருவதைக் கண்டு அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. மேலும், 3வது அலை தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை அறிவித்துள்ளனர். தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அரசு விதிகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அமைச்சர் பெருமக்கள் அரசு விதிகளை சற்றும் மதியாமல் நடந்து வருவது வேதனையளிப்பதாக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News