அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி.

அரக்கோணம் அடுத்த முனியப்ப நாயுடு கண்டிகையில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்

Update: 2021-12-06 14:03 GMT

மின்சாரம் தாக்கி பலியான லாரி டிரைவர் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் பஞ்சாயத்து அமீர்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் (34), லாரிடிரைவரான  இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவி மற்றும் மகன்,மகள் உள்ளனர். லோகேஷ்  அங்குள்ள , தார்போரா ரெடி மிக்ஸர் ப்ளானட் என்ற நிறுவத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்..

இந்நிலையில் லோகேஷ் அருகிலுள்ள முனியப்பநாயுடு கண்டிகையில் உள்ள கம்பெனியின் சர்வீஸ் சென்டரில் லாரியை விட்டு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லோகேஷ் அங்குள்ள இயந்திரத்தைத் தொட்டதில் மின்சாரம. தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

இதுகுறித்து அரக்கோணம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர் உடனே சம்பவ இடத்திற்கு வந்தப் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக   மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News