அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே மோசூர் என்ற இடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 01:45 GMT

கோப்பு படம் 

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அரக்கோணம் - மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது, சரக்கு ரயிலின் 22, பெட்டிகள் தடம் புரண்டதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தால், சென்னை - அரக்கோணம் இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு ரயிலில் அலுவலகம் செல்வோர், இதனால் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். சரக்கு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்பு வாகனங்கள் விரைந்துள்ளன. விபத்து குறித்த முழு விவரங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. 

Tags:    

Similar News