அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது போலீசார் செய்தனர்.

Update: 2021-08-07 10:38 GMT

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பியாக புகழேந்தி கணேஷ்  பொறுப்பேற்றார் .

அதனைத்தொடர்ந்து அவர் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்து   நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் .

அதன்பேரில், போலீசர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணம், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, அம்மனூர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து  3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News