13 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது

பணப்பாக்கத்தில் மனைவியின் அக்கா மகளை மிரட்டி கர்ப்பமாக்கியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-21 04:42 GMT

போக்சோவில் கைது செய்யப்பட்ட பிரபு.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பணப்பாக்கம் அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த பிரபு(34 ), தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிரபு மனைவியின் அக்கா வசித்து வருகிறார்.  இவரின் மகள் 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் சித்திவீடான  பிரபுவின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது பிரபு , குடிபோதையில் மகளென்றும் பாராமல் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே இது குறித்து அந்த சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனயைடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்  சிறுமி 7மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து அரக்கோணம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மகள் முறையில் உள்ள சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்பமாக்கியது சித்தப்பா பிரபு என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து  போக்சோ பிரிவின் கீழ் பிரவுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News