அரக்கோணம் இரயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு

அரக்கோணம் இரயில் நிலையத்தில் சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

Update: 2021-12-02 10:03 GMT

அரக்கோணம் சந்திப்பில் ஆய்வு மேற்கொள்ள வந்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் கணேஷ் வந்தார் . அவரை இரயில் நிலைய மேலாளர் வரவேற்றார்.

பின்னர் அவர் ,இரயில் நிலையத்தில் நிலைய நடைமேடைகள், ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம், சிக்னல் அறை, ரெயில் கட்டுபாட்டு அறை, ரெயில் ஒட்டுனர்கள், மற்றும் கார்டுகள் ஒய்வறைகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் .

அப்போது அரக்கோணம் ரெயில்வே அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புபடை அதிகாரி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News