அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரக்கோணம் எஸ். ஆர். கேட் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரைபோலீஸார் விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.

Update: 2021-07-25 11:59 GMT

பைல் படம்.

அரக்கோணம் எஸ். ஆர். கேட் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ,போலீசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் ஓடினர். இதனால் சந்தேமடைந்த போலீஸார், அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர் அதில்,அரக்கோணம் சாய் நகரை சார்ந்த தாஸ் மகன் மணிகண்டன் (21), கிருபில்ஸ்பேட்டையை சார்ந்த சசிகுமார் மகன் பிரேம் குமார்(27). என்று தெரியவந்தது.

அவர்களை தொடர்ந்து விசாரித்தத்தில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் கைது செய்து பதுக்கி வத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்..

Tags:    

Similar News