முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்

ஊராட்சி தலைவர்கள் கண்களில் கருப்பு துணி பேஜ் மாஸ்க் அணிந்து ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

Update: 2021-09-19 15:28 GMT

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் கண்களில் கருப்பு துணி பேஜ் மாஸ்க் அணிந்து தர்ணா போராட்டம்.

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் கண்களில் கருப்பு துணி பேஜ் மாஸ்க் அணிந்து தர்ணா போராட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன் தங்களது கண்களில் கருப்பு துணிகளை கட்டியும் கருப்பு பேஜ் கருப்பு மாஸ்க் ஆகியவற்றை அணிந்து ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறி தர்ணா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 ஊராட்சி தலைவர்களின் நிர்வாக செயல்பாட்டில் அரசியல் தலையீடு மாவட்ட ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் ஒருதலைபட்சமான முறையில் தொடர்ந்து தலையீடு காரணமாக தங்களது ஊராட்சிகளின் மக்களின் அன்றாட அடிப்படை பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக கூறி முதுகுளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பாக கருப்பு துணியை கண்களில் கட்டி கருப்பு பேஜ் கருப்பு மாஸ்க் அணிந்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்து தர்ணா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் அளித்தனர்.

Tags:    

Similar News