திராவிட கட்சிகளின் ஊழலை பட்டியலிட்டு வாக்கு கேட்பேன்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-15 17:22 GMT

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத்நிஷா முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் திராவிட கட்சிகளின் ஊழலை பட்டியலிட்டு பொது மக்களிடம் வாக்கு கேட்க உள்ளதாகவும், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News