முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது

Update: 2022-05-13 15:00 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில்  நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் பணி

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி. வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது.

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வருகிற மே 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்திலுள்ள முக்கியமான நகரங்களில் இருந்து தலைசிறந்த 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு இன்று வாடிவாசல் அமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது. வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News