பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டில் வைரம், தங்க நகைகள் திருட்டு

பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டில் வைரம், தங்க நகைகள் திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-02-21 15:08 GMT

பைல் படம்.

பெரம்பலூர் டவுன் பகுதி மேற்கு அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59).இவர் சமையல் எண்ணெய் டீலராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு சுமதி என்ற மனைவியும் பரணிதரன், கார்த்தி, சபரி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.

இதில் பரணிதரன் சென்னையில் உள்ளார். கார்த்திக் வெளிநாட்டிலும் சபரி பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி ரவிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள பரணிதரன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மீண்டும் 20ந் தேதி இரவு வீட்டுக்கு வந்தனர் அப்போது  சுற்றுச்சுவர் கதவு திறந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு இல்லாமல் திறந்து இருந்ததாகவும், உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்திருந்த வைரத்தோடு, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை, தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News