மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு

மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு, பெரம்பலூரில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-10-26 00:15 GMT

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில், துரை வையாபுரிக்கு வரவேற்பு அளித்த மதிமுகவினர்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வைகோ மகன் துரை வையாபுரி, நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணம் புறப்பட்டார். துரை வையாபுரிக்கு,  பெரம்பலூர் 4 ரோடு பகுதியில்,மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் சட்டப் பேரவை தொகுதி எம்.எல்.ஏவுமான சின்னப்பா தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் துரைராஜ், ஜெயசீலன், ரோவர் வரதராஜன் உள்ளிட்டவர்கள், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவருக்கு , மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில்,  மதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News