வேப்பந்தட்டை ஊராட்சியில் 50 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

வேப்பந்தட்டை ஊராட்சியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 50 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Update: 2021-06-18 12:41 GMT

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 50 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு  கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை விளக்கும் வகையில், வேர்ல்டு விஷன் இந்தியா எனும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி கலியமூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News