தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2021-12-25 10:12 GMT

உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்.

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். உதகை, குன்னூர் , கோத்தகிரி , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குறிப்பாக உதகையில் அரசு தாவரவியல் பூங்கா பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழகம் மற்றும் கேரளா சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்கா காலநிலையை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் கூறும்போது, சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக ஊட்டிக்கு குடும்பத்துடன் வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தற்போது தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்க்கும்போது இங்குள்ள காலநிலை ரம்மியமாக உள்ளதாக தெரிவித்தனர்.

அதே போல் ஒவ்வொருவரும் இங்கு உள்ள சுற்றுலா தளங்களை காண குடும்பத்துடன் குவிந்து வருவது காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News