ஊட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை நாளான இன்று ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-03-06 07:16 GMT

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை காண வருகை புரிகின்றனர். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் மைசூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான இன்று உதகையில் இருந்து மைசூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள படப்பிடிப்பு தளம் மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். பைக்காரா படகு இல்லத்தில் அதிவேகப் படகுகள், இயந்திரப் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

உதகை மைசூர் சாலையில் உள்ள ஷூட்டிங் மட்டம் சூழல் சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. மேலும் உதகை படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களிலும் வார விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தற்போது உதகையில் இதமான காலநிலை நிலவுவதை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே வரும் நாட்களில் மேலும் ஒரு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 


Tags:    

Similar News