நீலகிரியில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்

4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-02 17:00 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.2.2022 அன்று நடைபெறுகிறது. 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து காவல்துறை மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. 4 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளில் மொத்தம் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்க 61 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News