உதகை நகராட்சி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நிர்வாகம் உத்தரவு.

Update: 2021-08-16 15:29 GMT

உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகைத் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.

உதகை நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1600 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாத கடைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அதிகமான வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் வாடகை நிலுவை தொகையினை உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News