உதகை நகராட்சியில் நகர மன்ற கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது;
உதகையில் நடைபெற்ற நகரமன்றக் கூட்டம்.
உதகை நகராட்சிக்குட்பட்ட, முப்பத்தி ஆறு வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம், நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள அடிப்படை தேவைகளை வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர் குறிப்பாக உதகை மார்க்கெட் வாடகை பிரச்சனை மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை ஆய்வு குறித்தும் கடுமையான வாடகை உயர்வால் வியாபாரிகள் பலர் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வார்டு கவுன்சிலர்கள் ஆணையாளரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து அனைத்து வார்டு கவுன்சிலரகளின் கோரிக்கையை நகராட்சி தலைவர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில், உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.