நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-04 16:45 GMT

தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரவாமல் இருக்க நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். வெளி மாநில சுற்றுலா பயணிகள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை காண்பித்தனர். அப்போது முதல் டோஸ் செலுத்தாதவர்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அருகே உள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News