விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரியில் இன்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா குவிந்ததால் பூங்காக்கள் களை கட்டியது.

Update: 2021-09-26 14:25 GMT

விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் ரோஜா பூங்காக்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விடுமுறை நாளான இன்று உதகை தாவரவியல் ரோஜா பூங்காக்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் குளிர்பிரதேச மாவட்டங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை நாளான இன்று சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்  ரோஜாக்களை கண்டு ரசித்தனர் மற்றும் குடும்பங்களுடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் உதகை தாவரவியல் பூங்கா அரசு ரோஜா பூங்காக்கள் களைகட்டி காணப்பட்டது.

Tags:    

Similar News