நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பட்டா மாற்றம் தொடர்பாக வரும் 3 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-30 15:45 GMT

நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 01.12.21 (புதன்கிழமை) ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கூக்கல் இயற்கை வேளாண்மை உற்பத்தி குழு கட்டிடத்தில் வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, குந்தா தாலுகா பாலகொலா சமுதாய கூடத்தில் உதவி ஆணையர் (கலால்) மணி, குன்னூர் தாலுகா காட்டேரி சமுதாய கூடத்தில் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கோத்தகிரி தாலுகா கக்குலா சமுதாய கூடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கூடலூர் தாலுகா பார்வுட் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் ஆகிய அலுவலர்கள் முன்னிலையில் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்படுகிறது. அதேபோல் 3-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News