உதகை நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்ற பாஸ்கரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-01-16 11:01 GMT

நீலகிரி மாவட்டம் உதகை மணிக்கூண்டு பகுதியில்,  மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உதகை நகர மத்திய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்துக்கு இடமாக,  தோள் பையுடன் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், உதகை பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (48) என்பதும், மதுபானங்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவர் விற்பனைக்கு வைத்த 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோதமாக மதுபானங்களை விற்ற பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News