உதகையில் சுகாதாரத்துறை சுப்ரமணியன் அமைச்சர் ஆய்வு
உதகையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பழங்குடியினர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.;
நீலகிரி மாவட்டம், உதகை மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ள ஜீரோ டிலே வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உதகை மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர். அருகில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீலகிரி கலெக்டர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்டோர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவர்கள் , அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதகை வந்துள்ளார் .
இன்று உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உதகை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.