நீதித்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-04-12 07:45 GMT

ஊட்டியில் சுகாதாரத்துறை சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றுவோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷனில் சுகாதாரத்துறை சார்பில் வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.முன்னதாக உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைக்குப் பின் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News