உதகையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, ஊட்டி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-08 15:27 GMT

உதகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தலைமையில்,  பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தப்பட்டது.

இதேபோல், உதகை பேருந்து நிலையத்தில்,  தொமுச சார்பில் தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் மாநில திமுக தோட்டத்தொழிலாளர் பொதுச்செயலாளர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News