நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்

நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.

Update: 2021-09-08 05:26 GMT

உதகை திரும்பிய நித்திஷை வரவேற்ற பெற்றோர்கள்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ். இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படித்து வருகிறார். பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும், இயற்கைக்கும் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீலகிரியில் இருந்து காஷ்மீர் லடாக் வரை 6752 கிலோமீட்டர் தனிநபராக பைக் பயணம் மேற்கொண்டு , 11 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்கள் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். லடாக் சென்று மீண்டும் உதகை திரும்பிய இளைஞரை அவரின் பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Tags:    

Similar News