உதகையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 170 பேர் மாவட்ட கலெக்டரிடம் மனு

உதகையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் 170 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2021-06-24 10:59 GMT

உதகை நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் நிலுவை ஊதியத் தொகையை வழங்கக் கோரிக்கை விடுத்து சுமார் 170 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் சுமார் 170 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரரிடம் கேட்கும் போது நகராட்சி நிர்வாகம் தொகை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அரசு அறிவித்த முன்கள பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளான நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் நிலுவை ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 170 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News