நீலகிரியில் 255 முகாம்களில் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட 1020 பணியாளர்கள்

நீலகிரி கலெக்டர்அம்ரித் சூட்டிங் மட்டம் பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலாதலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2022-01-02 12:05 GMT

ஊட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 235 நிலையான தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்களில் நடந்தது.

வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.255 முகாம்களில் ஆயிரத்து 20 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி கலெக்டர் அம்ரித்,  சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டதா என்பதை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தியவர்களை சிறிது நேரம் கண்காணித்து அதன் பின்னர் அனுப்ப வேண்டும் என்று செவிலியரிடம் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 17 ஆயிரத்து 897 பேர், 2-வது தவணை 4 லட்சத்து 91 ஆயிரத்து 769 பேருக்கு மொத்தம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News