கள்ளக்காதலியை எரித்த காதலனுக்கு ஆயுள் தண்டணை

Update: 2021-03-06 04:45 GMT

கடந்த 2017-ம் ஆண்டு ஊட்டி அருகே பைக்காரா பகுதியில் கள்ளக்காதலியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

ஊட்டி அருகே உள்ள பைக்காரா பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணியுடன் தகாத உறவு இருந்துள்ளது .கணவனை இழந்த ஆயிஷாவுடன் பழக்கம் ஏற்பட்ட ஆனந்தகுமார் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக கூறி அடிக்கடி சந்தேகிப்பதுடன் சண்டையிட்டு குடிபோதையில் மண்ணெண்ணையை ஆயிஷா மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

இதில் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிஷா தனது மரண வாக்குமூலமாக நடந்ததை கூறியதை அடுத்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளியான ஆனந்த் துக்கு ஆயுள் தண்டணையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News