பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
உதகையில் தி மு க சார்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.;
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை கட்டுப்படுத்த கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உதகை ஏ.டி.சி பகுதியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் பகுதியில் திமுகவின் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, முன்னாள் கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினை உடனடியாக கட்டுப்படுத்த கோரியும், இதனால் வெங்காயம், கருவேப்பிலை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைகிறது என கூறி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.