உடல் நலம் பாதித்தவரை அரவணைத்த - அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம்

சாலையோரங்களில் படுத்துறங்கியவரை அரவணைத்து, அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் அடைக்கலம் கொடுத்தது.

Update: 2021-02-01 15:33 GMT

உதகையில் நோய்வாய்ப்பட்டவரை குடும்பம் ஒதுக்கிய நிலையில் கரம் நீட்டி அரவணைத்த அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம், ஓர் நெகிழ்ச்சி சம்பவம்.

உதகை ஊராட்சிக்குட்பட்ட நஞ்சநாடு பகுதியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிபவர் திடீரென உடல்நலக் குறைவால் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை கண்டதும் வீட்டிற்கு வரக் கூடாது எனவும் தங்களை பார்க்க வரவேண்டாம் எனவும் கூறி மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடல்நலம் பாதித்தவர். சாலையோரங்களில் படுத்துறங்கியதை கண்ட அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தினர் அவரை அழைத்துக் கொண்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவரை சுத்தப்படுத்தி சிகை அலங்காரம் செய்து உணவு வழங்கி அடைக்கலம் கொடுத்தனர். உடல் நலம் பாதித்தவர் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பின் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தால் அரவணைத்த இச்சம்பவம் உதகை நகரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கு குடும்பத்தால் ஒதுக்கப்பட்டோரும் நகரில் மனநலம் பாதித்து சுற்றி திரிவோர் என 100 க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்துள்ள அப்துல் கலாம் ஆதவற்றோர் இல்லத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News