உதகையில் கண் பரிசோதனை முகாம்

Update: 2021-01-29 08:15 GMT

32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உதகையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற வந்தோருக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவமுகாமில் ஓட்டுநர் உரிமம் பெற வந்த நூற்றுக்கணக்கானோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் குலோத்துங்கன், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன், போக்குவரத்து ஆய்வாளர் அப்துல்கலாம் உட்பட ரெட்கிராஸ் நிர்வாகிகள் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News