கீழ்குந்தா: முழு வீச்சில் தூய்மைப்பணிகள்

உதகை அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதோருக்கு அபராதம் .

Update: 2021-05-16 08:08 GMT

குன்னூர் அருகே உள்ள கீழ்குந்தா பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி, மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழ்குந்தா பேரூராட்சியில் செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றவும் கிருமிநாசினிகள் பயன்படுத்தவும், மாஸ்க் அணியவும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புவோர்களுக்கும் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் 25க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்து நிலையங்கள் வணிக வளாகங்கள், பிரதான சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

Tags:    

Similar News