கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூர் அருகே இரவில் புகுந்த காட்டுயானை குடியிருப்பை சேதப்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-03-18 02:59 GMT

நீலகிரி : கூடலூர் அருகே உள்ள ஓடக்கொல்லி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது.

இரவு ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு யானையை துரத்தி வரும் நிலையில் இரவு ஓடக் கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

மேலும் அதிகாலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News