பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-11-23 09:15 GMT

பந்தலூர் நகர் பகுதியில் குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை.

பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறிப்பாக யானை , சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பந்தலூர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக உலா வந்த சிறுத்தையின் வீடியோ ஒளிப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News