முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் பத்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் வாகன சவாரி துவங்கியுள்ளது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.;

Update: 2021-01-09 15:36 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் கடந்த மார்ச் 17ஆம் தேதி கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.

இதில் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாம் மற்றும் யானை சவாரி அனைத்தும் நிறுத்தப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வாகன சவாரி துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவேளை விட்டு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Similar News