புதுச்சத்திரம் அருகே புதன் சந்தை மாட்டு சந்தையில் ரூ. 2. 50 கோடி வர்த்தகம்

புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 2.50 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது.;

Update: 2025-02-26 04:20 GMT

நாமக்கல் : புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 2.50 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது.

புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது வழக்கம்.

இந்த மாட்டுச் சந்தைக்கு நாமக்கல், எருமைப்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 2.50 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது.

Tags:    

Similar News