மின்வாரிய ஒயர்கள் திருடிய இரு நபர்கள் கைது
குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வாகனத்தில் ஒயர்கள் திருடிய இருவர் கைது;
மின்வாரிய அலுவலகத்தில் ஒயர் திருடிய இருவர் கைது
குமாரபாளையம்: குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்கள் திருடிய இருவரை மின்வாரிய ஊழியர்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
குமாரபாளையம் அருகே எதிர்மேடு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள மின்வாரிய அலுவலக பண்டக சாலை முன் நேற்று காலை 7:00 மணியளவில் இரு நபர்கள் மின் ஒயர் சுருள்களை ஒரு டூவீலரில் ஏற்றிக்கொண்டு செல்வதைக் கண்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் திரு. வாமலை, அவர்களிடம் யார் நீங்கள், எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே, அவர்கள் தங்கள் வாகனத்தில் வேகமாகத் தப்பிச் சென்றனர்.
இதைக் கண்ட மின்வாரிய ஊழியர்கள் அந்த இருவரையும் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒயர் சுருள்களும், டி.வி.எஸ். 50 மொபட் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் வட்டமலை, வளையக்காரனூரைச் சேர்ந்த 28 வயதான வடிவேல் மற்றும் 25 வயதான ஜீவா ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், திருடிய மின் சுருள்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.