நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.;
பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், செல்போன் நம்பர் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் மாதம்தோறும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான முகாம் நாளை 10ம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா ஆபீஸ்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும். சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.
பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு, தங்களின் ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.