தையல் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் தையல் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-17 12:15 GMT

பைல் படம் 

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், 47. விசைத்தறி கூலி. இவரது 16 வயது மகள் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே  உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணிக்கு, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் மாலை 03:30 ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News